Thursday, August 2, 2012

துயரம்!

இறைவா !
கல்லுக்குள் ,
ஈரத்தை வைத்தாய் !
சிப்பிக்குள் ,
முத்தை வைத்தாய் !
மண்ணுக்குள்,
வைரத்தை வைத்தாய் !
வானுள் ,
விண்மீனை வைத்தாய் !
புகையினுள் ,
நெருப்பை வைத்தாய் !
புயலுக்கு பின் ,
அமைதியை வைத்தாய் !
என்னுள் ,
மனதை வைத்தாய் !
ஆனால் மனதினுள் ,
துயரத்தை ஏன் வைத்தாய்?