Thursday, June 6, 2019

இசை இனிது!!

இசையும்,
இசை தீண்டிய வரிகளும்,
உள்ளம் திருடுகின்றது!!
இசையோடு,
பயணிக்கையில்..
தூரம் தெரிவதில்லை!!
வாழ்க்கை கூட பாராமாய்
இருப்பதில்லை!!
உண்ணும் போதும்,
உறங்கும் போதும்,
உற்ற துணை இசையே!!
ஆராரோவில் ஆரம்பித்தது,
ஆடி அடங்கும் வரை,
விலகுவதில்லை!!
இன்னிசை மட்டும்,
இல்லை என்றால்...
உணர்வுகளும் மரித்திருக்கும்!! 🎼🎵🎶🎹🎸🎷🎻🥁🎤📯