Wednesday, October 29, 2014

பந்தம்!

தந்தை மகன் பிணைப்பு ...
காண இயலாது ,
உணர முடியும்!!
வார்த்தை போர் ஆயிரம் இருக்கும்!
அனால் ,
ஓவ்வொன்றின் முடிவிலும் ,
பாசம் ஜெயிக்கும்!
மைந்தனின் முதல் கதாநாயகன்
தந்தை !!
தந்தையின் ஈடில்லா நாயகன்
மகன்!!
இருவரும்,
அன்பை பறைசாற்றுவது இல்லை !!
ஆயினும் ,
ஒரு பார்வையே உணர்த்தும் ,
உயிரினும் மேலான உறவு என்று!!




வேள்வி!

காதல்,
புனித வேள்வியாகவே
இருக்கட்டும் !!
ஆனால் ,
அதில் எரியும் நெருப்பு ...
பெற்றோரின் நம்பிக்கையாக
இருக்க வேண்டாம் !!